Title of the document
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 31 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் 155 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் 10.08.2016க்குள் விண்ணப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.theni.tn.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post