Title of the document


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று துவங்கியது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் மனுவை தாக்கல் செய்யலாம்.

விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் செப்., 22ம் தேதியாகும். தி.மு.க. சார்பில் 19-ந்தேதி முதல் விருப்பமனு பெறப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post