Title of the document

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பொ.மல்லாபுரம் பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்தார்.
தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் திருமலை பங்கேற்று விளையாடினார். இதில், 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல, 17 வயதுக்குள்பட்டோருக்கான பூப்பந்தாட்டத்தில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். இந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் சேகர், மேகநாதன், ஜோதி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல்அஜி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post